செங்கடல்

துபாய்/கெய்ரோ: இந்தியப் பெருங்கடலில் எம்எஸ்சி ஓரியன் கொள்கலன் கப்பலைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடந்தப்பட்டதாக ஏமனின் ஹூதிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்/ஏடன்: ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தாங்கிய இரண்டு கனரக வாகனங்களுக்கு எதிராகத் தான் தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவம் மார்ச் 8ஆம் தேதியன்று தெரிவித்தது.
கெய்ரோ: ஹூதி படையினர், ஏடன் வளைகுடாவில் எம்/வி எம்எஸ்சி ஸ்கை II கப்பல் மீது இரு ஏவுகணைகளைப் பாய்ச்சியது; கப்பல்களைக் குறிவைப்பதற்கென உள்ள அந்த ஏவுகணைகளில் ஒன்று, எம்/வி எம்எஸ்சி ஸ்கை II கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் (சென்ட்காம்) செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) தெரிவித்தது.
வாஷிங்டன்: ஹூதி கிளர்ச்சிப் படைகளின் தரையிலிருந்து தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கப் படைகள் மார்ச் 1ஆம் தேதியன்று தாக்கி நாசம் செய்துள்ளன.
வா‌ஷிங்கடன்: ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.